search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்ச நீதிமன்றம் தீர்ப்பு"

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுப்பிரமணியன் சுவாமி, கமல் உள்ளிட்ட பலர் வரவேற்றுள்ளனர். #SabarimalaVerdict #SubramaniamSwamy
    சென்னை:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய விசாரித்தது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா உள்ளிட்ட 4 நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர். நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். மத வழிபாடுகளை நிதிமன்றம் முடிவு செய்யக்கூடாது என்று அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எனினும், மெஜாரிட்டி  நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது. தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக தேவசம்போர்டு கூறியுள்ளது.



    இந்நிலையில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதுரை ஆதீனம், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசன், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

    சபரிமலையில் பாலின சமத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

    உச்ச நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பு நல்ல முடிவு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார். கடவுள் அனைவருக்கும் சமமானவர். போகவேண்டும் என்று நினைப்பவர்கள் போகலாம் என்று கூறியுள்ள கமல், கலாச்சாரம் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும் என்று குறிப்பிட்டுள்ளார். #SabarimalaVerdict #SubramaniamSwamy
    ஆண் பெண் இடையிலான தவறான உறவு குற்றம் அல்ல என்றும், இதில் தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு 497 அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. #Adultery #Section497 #SupremeCourt
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்திய தண்டனை சட்டம் 597-வது பிரிவில் தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க வகை செய்கிறது. பெண்ணுக்கும் சமமான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர்.

    அப்போது ஆணுக்கு மட்டும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கும் 597-வது பிரிவு ரத்து செய்யப் படுவதாகவும் தகாத உறவு குற்றம் இல்லை என்றும் பரபரப்பு தீர்ப்பளித்தனர்.



    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:-

    கணவர் என்பவர் பெண்ணின் எஜமானர் அல்ல. ஆணுக்கு பெண் சமம். இதில் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விரோதம் ஆகும். ஆணுக்கு சமமாக பெண்களையும் நடத்த வேண்டும். இதில் பாகுபாடு காட்டுவது சட்ட விதிமீறல் ஆகும்.

    கணவன்-மனைவி இடையே விவாகரத்து நடக்க தகாத உறவு காரண மாகிறது. தகாத உறவு வி‌ஷயத்தில் அதில் யாரும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் அது குற்றம் இல்லை. தகாத உறவில் விவாகரத்து நடக்கலாம். யாரும் தற்கொலைக்கு தூண்டப்படக்கூடாது.

    திருமணமான பெண் கணவருடன் மட்டுமல்ல, வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தால் அது குற்றம் இல்லை. மேற்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் தகாத உறவு குற்றம் இல்லை. எனவே ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் 597-வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அது ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார். #Adultery #Section497 #SupremeCourt

    ×